லண்டனில் நடைபெற்ற 2023ஆம் ஆண்டிற்கான விருது வழங்கும் விழாவில் ஆண்டின் சிறந்த உதைப்பந்தாட்ட வீரருக்கான விருதினை மூன்றாவது முறையாகவும் தனதாக்கி அசத்தினார் ஆர்ஜன்டீன நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி.
FIFA வினால் வருடா வருடம் இடம்பெறும் விருது வழங்கல் விழா இம்முறை லண்டனில் (16) இடம்பெற்றது. இதில், வலமை போன்று ஆண்டின் சிறந்த வீரர், வீராங்கனை, சிறந்த கோல் காப்பாளர் மற்றும் சிறந்த பயிற்றுவிப்பாளர் என தலைசிறந்த பல விருதுகள் வழங்கப்பட்டன. அந்தவகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நிறைவுக்கு வந்த உதைப்பந்தாட்ட உலகக்கிண்ண தொடரிலிருந்து 2023 ஆகஸ்ட் வரையான காலப்பகுதியின் திறமையை வெளிப்படுத்தியவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
கிண்ணத்திற்கான இறுதி மோதலில் ஸாஹிரா – அலிகார் அணிகள்
அதற்கமைய ஆண்டில் சிறந்த உதைப்பந்தாட்ட வீரர் விருதிற்கு 30 வீரர்கள் பெயரிடப்பட்டிருந்தனர். அதில் இறுதியில் ஆர்ஜன்டீனா அணிக்கு உலகக் கிண்ணத்தை வென்று கொடுத்த லியோனல் மெஸ்ஸி மற்றும் மென்சஸ்டர் சிட்டி கழக முன்கள வீரரானஹாலண்ட் இருவருக்கிடையில் கடும் போட்டி நிலவியது. இருப்பினும் வாக்கெடுப்பின் அடிப்படையில் லியோனல் மெஸ்ஸி அதிக வாக்குகளைப் பெற்று 2023ஆம் ஆண்டின் சிறந்த உதைப்பந்தாட்ட வீரர் விருதை தனதாக்கினார். இவ்விருதுடன் தொடராக இரு முறை (2022, 2023) இந்த விருதை வெற்றி கொண்டுள்ளதுடன் மொத்தமாக 3 சிறந்த வீரருக்கான விருதுகளை வெற்றி கொண்ட முதல் வீரர் என்ற பெருமையினையும் தனதாக்கிக் கொண்டார் மெஸ்ஸி.
இவ்விருது வழங்கும் விழாவில் சிறந்த பெண்கள் உதைப்பந்தாட்ட வீராங்கனைக்கான விருதை ஸ்பெய்ன் அணியின் வீராங்கனையான அயாடானா பென்மாட்டி தனதாக்கிக் கொண்டதுடன் சிறந்த பயிற்றுவிப்பாளருக்கான விருதை மென்சஸ்டர் சிட்டி கழகத்தின் பெப் குஆர்டியோலா தனதாக்கினார்.