ஐசிசி இன் சிறந்த ஒருநாள் வீராங்கனையாக சிங்கப் பெண் சமரி அத்தபத்து

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் கடந்த ஆண்டின் ஒருநாள் போட்டிகளின் சிறந்த வீராங்கனையாக இலங்கை அணியின் தலைவியான சகலதுறை வீராங்கனை சமரி அத்தபத்து தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஐசிசி ஒவ்வொரு வருடமும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் திறமையை வெளிப்படுத்திய வீர, வீராங்கனைகளை விருது வழங்கி கௌரவித்தது வருகின்றது. அந்தவகையில் கடந்த 2023 ஆம் ஆண்டில் மகளிர் ஒருநாள் போட்டிகளின் சிறந்த வீராங்கனையாக இலங்கை அணியின் சகலதுறை வீராங்கனையும் அணித்தலைவியுமான சமரி அத்தபத்து தெரிவாகியுள்ளார்.

இவர் கடந்த ஆண்டில் மாத்திரம் 69.16 என்ற துடுப்பாட்ட சராசரியுடன் 415 ஓட்டங்களை பதிவு செய்துள்ளார். அத்தோடு குறிப்பிடத்தக்க விக்கெட்டுக்களையும் வீழ்த்தியிருந்தார். அத்துடன் அசத்தல் சதம் ஒன்றையும் விளாசியுள்ளதுடன் இலங்கை மகளிர் அணியின் வெற்றிக்கு மிக முக்கிய பங்கினை ஆற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் அவரே கடந்த ஆண்டுக்கான ஐசிசி இன் ஒருநாள் மற்றும் ரி20 ஆகிய இரு அணிகளின் தலைவி என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *