இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகர் பதவியில் இருந்து அதிரடியாக விலகியுள்ளார்.
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்தள்ளது.
ஐக்கிய அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் இடம்பெறும் T20 உலகக் கிண்ணத் தொடரில் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை வீரர்கள் முதல் சுற்றுடனேயே வெளியேறி ஏமாற்றம் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து அணி வீரர்கள் மற்றும் அதிகாரிகள் மீது தொடர்ச்சியான விமர்சனங்கள் வந்தவாறு உள்ளது.
ஆப்கானை வீழ்த்திய தென்னாபிரிக்கா முதல் முறை உலகக்கிண்ண இறுதிப் போட்டியில்
இவ்வாறான ஒரு நிலைமையிலேயே பயிற்றுவிப்பு ஆலோசகராக பணியாற்றி வந்த மஹேல ஜயவர்தனவின் பதவி விலகல் செய்தியும் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மஹேல ஜயவர்தன கடந்த 2022ம் ஆண்டு இலங்கை அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகராக பதவியேற்றமை குறிப்பிடத்தக்கது.