பிபா வெளியிட்டுள்ள சர்வதேச அணிகளுக்கான புதிய தரப்படுத்தலில் இலங்கை தேசிய உதைப்பந்தாட்ட அணி ஐந்து இடங்கள் முன்னேறி 200ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
சர்வதேச போட்டிகளில் முன்னேற்றகரமான விளையாட்டை காண்பித்து வரும் இலங்கை வீரர்கள், அண்மையில் இடம்பெற்ற AFC அசிய கிண்ண தொடருக்கான தகுதிச் சுற்றில் கம்போடிய அணியை எதிர்கொண்டது. இதில் இலங்கையில் இடம்பெற்ற போட்டியை கோல்கள் இன்றி சமநிலையில் முடித்துக்கொண்ட இலங்கை வீரர்கள், கம்போடியாவில் இடம்பெற்ற போட்டியை பெனால்டியில் வெற்றி கொண்டு அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றனர்.
கம்போடியாவுக்கு எதிரான இலங்கை குழாம் அறிவிப்பு
எனவே, குறித்த போட்டியில் பெற்ற வெற்றி, மற்றும் கடந்த கால போட்டிகளின்
பெறுபேறுகளுக்கு அமைய இலங்கை அணி 11 புள்ளிகளை அதிகமாகப் பெற்று 5 இடங்கள் முன்னேற்றம் கண்டுள்ளது.
இதன்படி, முன்னர் 820 புள்ளிகளுடன் 205ஆவது இடத்தில் இருந்த இலங்கை அணி தற்போது 831 புள்ளிகளுடன் 200ஆவது இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளது.
இலங்கை ஆடவர் அணியானது கடந்த ஐந்து வருடங்களாக தரப்படுத்தலில் 205ஆம் இடத்தில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.